நீலகிரி பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலி - சுற்றுலாப் பயணி எடுத்த வீடியோ வைரல்..!

பைக்காரா அணையில் படகு சவாரி செய்யும்பொழுது கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டுக்கொண்டிருந்த போது, வீடியோ எடுத்துள்ளார்.



நீலகிரி: பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலியின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி வனக் கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

ஊட்டி கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது.

இந்த அணையின் கரையோரங்களில் படகு சவாரி செய்யும் போது அவ்வப்போது மான், காட்டு மாடுகள், புலி உள்ளிட்ட வன விலங்குகள் நீர் அருந்த வருவதை காண முடியும்.

இந்நிலையில், பைக்காரா அணையில் படகு சவாரி செய்யும்பொழுது கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டுக்கொண்டிருந்தது.

அப்போது, படகு அருகில் வருவதை பார்த்தவுடன் நீரிலிருந்து புலி கரைக்கு சென்று வனப்பகுதிக்குச் சென்று மறைந்தது.

இதனை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...