பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி கோவையில் பா.ஜ.கவினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததற்கு காரணம் என்னவென்று கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க கோரி பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியிலிருந்து 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் இருந்து 10 ரூபாய் குறைத்தது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில் தமிழக அரசு விலையை குறைக்கவில்லை என பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, 2014 - ஆம் ஆண்டில், பெட்ரோல் மீது ரூ.9.20 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ரூ. 32.90 ஆக உயர்த்தியிருந்தது. அதேபோன்று, 2014 - ல் டீசல் மீது ரூ.3.46 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருந்தது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் ஒன்றிய அரசின் வரியை உயர்த்தியிருந்தது.

இதனிடையே, மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியிலிருந்து 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் இருந்து 10 ரூபாய் குறைத்தது.

ஆனாலும், தமிழக அரசு இந்த விலையை குறைக்காததற்கு காரணம் என்னவென்று கேட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...