கோவையில் 6-லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: சுகாதாரத்துறை தகவல்

கோவை மாவட்டத்தில் 6-லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் 6 லட்சம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எளிதில் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியிலிருந்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 700 போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். இவர்களில் நேற்று மாலை நிலவரப்படி 27 லட்சத்து 69 ஆயிரத்து 673 போ் முதல் தவணையும், 14 லட்சத்து 94 ஆயிரத்து 60 போ் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 99 சதவீதம் போ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில், 2 ஆம் தவணை தடுப்பூசியை 53 சதவீதம் போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கிடையே 3 மாத இடைவெளி இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. 2 ஆம் தவணைக்கான நாள்கள் கடந்தும் கிட்டத்தட்ட 6 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நேற்று வரை 6 லட்சம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பலர் 2 ஆம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாள்களிலும், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 40 நாள்களுக்குள்ளும் 2 ஆம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே 2 ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...