விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்-பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் பேட்டி

மத்திய அரசு நூல் விலை ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக நெசவாளர் அணி சார்பில் விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அரசு நூல் விலை ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக நெசவாளர் அணி சார்பில் விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் விழா திமுக நெசவாளர் அணி சார்பில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம். நாகராஜன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த 15 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கினர்.



மேலும் பெண் குழந்தைகளுக்குச் செந்தாமரை எனவும், ஆண் குழந்தைகளுக்கு அருள்நிதி என பெயர் சூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம் நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசு நூல் விலை மற்றும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளது.

இதனால் கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இம்மாவட்டங்களில் உள்ள நெசவாளர்கள் விசைத்தறிகள் விற்றுச் சாப்பிடவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் இல்லை என்றால் திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...