சித்தாபுதூர் பகுதியில் முதியவரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் வீட்டுக்குள் புகுந்து 48 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ் (75). இவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பக்கத்து வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வந்தார். ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்து வந்தார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தொழில் தேவைக்காக என்னிடம் ரூ. 17 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லை.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த செந்தில்குமாரி வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டார்.
எனவே, அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் முதியவரை ஏமாற்றி பணம் பெற்று 48 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ் (75). இவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பக்கத்து வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வந்தார். ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்து வந்தார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தொழில் தேவைக்காக என்னிடம் ரூ. 17 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லை.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த செந்தில்குமாரி வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டார்.
எனவே, அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் முதியவரை ஏமாற்றி பணம் பெற்று 48 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.