கோவையில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை எந்த விதமான போராட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது - காவல்துறை ஆணையர்..!

இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவையில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை எந்த விதமான போராட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

சமீபகாலமாக பல்வேறு அமைப்பினர், ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய செயல்கள், மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும். பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளன.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கவும் நவ.,26 முதல் டிச.,10 வரை, எந்த ஒரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.

இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், பொதுமக்கள் நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...