கொடநாடு காவலாளி கொலை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை விசாரணை.!

கோவை கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலாளர் நடராஜனிடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.


கோவை: கோவை கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலாளர் நடராஜனிடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. இங்கு, கடந்த 2017, ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொள்ளை கும்பல் நுழைந்து, பணியிலிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர் பங்களாவிலிருந்த பல்வேறு ஆவணங்களையும், பொருட்களையும் திருடி சென்றது. சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முக்கிய குற்றவாளியான சாலை விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால், நண்பர் ரமேஷ், கனகராஜின் மனைவி மற்றும் மைத்துனர், குற்றவாளி சயான் உட்பட 6 பேர், சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த போலீசார், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட 40க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

எஸ்டேட் முழுவதும் மேற்பார்வை செய்து, பராமரிப்பு பணிகளை நடராஜன் செய்து வந்ததால் இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக அவருக்கு தகவல் தெரிந்திருக்கலாம் என்பதால் இந்த விசாரணை நடந்ததாகவும், இதில் அவர், பல தகவல்களை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...