பொள்ளாச்சியை மையப்படுத்தி தென்னை நார் குழுமம்..! தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி..!!

உழவர் சந்தைகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஸ்மார்ட் கார்டு போல் மாற்றித் தர வேண்டும். அப்போது தான் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, நெகமம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் என்பது பெரும் வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக உள்ளது.



தென்னை மரத்தின் பலன் மூலம் 42 பொருட்கள் மதிப்பு கூட்டு முறையில் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயம் மூலம் இத்தொழில் நிறுவனங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று விவசாய நிலங்கள், நீர் பாதிக்காத வகையில் ஆய்வுக்கு உட்படுத்தி, தென்னை விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்கள் கோவைக்கு அறிவித்துள்ள போதும், தென்னை நார் தொழில் குழுமம் அமைக்க பொள்ளாச்சி பகுதியை மையப்படுத்தி ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்பதை வரவேற்கின்றோம்.



மேலும், மழைநீரை வீணாகாமல் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கற்கள் நட்டி பச்சை வண்ணம் பூச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து விவசாயிகள் பலர் கூறுகையில், "உழவர் சந்தைகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஸ்மார்ட் கார்டு போல் மாற்றி தர வேண்டும். அப்போது தான் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும்," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...