ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், ஜல்லிகட்டு மாட்டுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மத்திய பா.ஜ.க அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...