கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம்..!

எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வ மாளிகையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த விருப்பமானது வழங்கப்படும்.

விருப்ப மனுக்கள் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, மாவட்டச் செயலாளர்கள் அம்மன் அர்ஜுனன் எம். எல். ஏ., பி .ஆர் .ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், ஏற்கனவே விருப்ப மனு வழங்கியதை பெற்றவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரசீதை காண்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...