கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம்..!

எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வ மாளிகையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த விருப்பமானது வழங்கப்படும்.

விருப்ப மனுக்கள் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, மாவட்டச் செயலாளர்கள் அம்மன் அர்ஜுனன் எம். எல். ஏ., பி .ஆர் .ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், ஏற்கனவே விருப்ப மனு வழங்கியதை பெற்றவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரசீதை காண்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...