உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா... கிணத்துக்கடவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கல்..!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் கேக் வெட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின் தலைமையில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிங்காரம் பாளையம் பகுதியில் உள்ள பிரசெண்டேஷன் கன்வெண்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 2 லட்சத்திற்கான உயிர்காப்பீடு இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜசோழன், துணை அமைப்பாளர் சல்மான்கான், நகர பொறுப்பாளர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், முன்னாள் செயலாளர் சின்னசாமி, ஆறுச்சாமி, துரைசாமி, சேகர், கனகவேல், விமல், அன்பரசு, கோவிந்தராசு, சிவானந்தம், சக்தி தினேஷ், கிருஷ்ணன், கதிர்வேல் கிட்டு, பிரபு, டேவிட், சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...