இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கமும் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (26.11.2021) இடையர்பாளையத்தில் உள்ள V.R.G.திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.

'டாக்ட்' சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் G.பிரதாப்சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பயனாளிக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்ட் சங்கத்தின் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன், துணை தலைவர்கள் P கார்த்திகேயன், S.பாரத்ரவி, மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கண்ணன் திபாபாரதி, பொன்சத்தியபாமா, அலுவலர் சுரேஷ் பங்கேற்றனர்.

இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
'டாக்ட்' சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் G.பிரதாப்சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பயனாளிக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்ட் சங்கத்தின் பொருளாளர் M.லீலாகிருஷ்ணன், துணை தலைவர்கள் P கார்த்திகேயன், S.பாரத்ரவி, மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் கண்ணன் திபாபாரதி, பொன்சத்தியபாமா, அலுவலர் சுரேஷ் பங்கேற்றனர்.
இந்த முகாமில் ESI இல்லாத குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதல் கட்டமாக 300 பேர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து கொடுக்கப்பட்டது.