விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசே நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் ஒரு வருடத் தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளின் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும், மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களை சுருக்கியுள்ளது என்று அதனைக் கண்டித்தும், பணமயமாக்கள் என்கிற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் மையப்படுத்தும் ஒன்றிய அரசு என்றும், இவை அனைத்தும் போராட்டம் நடத்தியவர்கள் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் திரளானோர் பங்கேற்றனர்.
தலைநகர் டெல்லியில் ஒரு வருடத் தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளின் போராட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும், மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
விவசாயிகள் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களை சுருக்கியுள்ளது என்று அதனைக் கண்டித்தும், பணமயமாக்கள் என்கிற பெயரில் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் மையப்படுத்தும் ஒன்றிய அரசு என்றும், இவை அனைத்தும் போராட்டம் நடத்தியவர்கள் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதில் திரளானோர் பங்கேற்றனர்.