பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையில் மாட்டுவண்டியில் வந்து பாஜகவின் விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்..!

மேலும், திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


கோவை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையில் மாட்டுவண்டியில் வந்து பாஜகவின் விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில் அதனை தொடர்ந்து சில மாநிலங்களில் விலை குறைந்தது. இருப்பினும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பெட்ரோலுக்கு ரூ.3 குறைந்திருந்த நிலையில், மத்திய அரசின் விலை குறைப்பு அமலுக்கு வரவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி தமிழக பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, 2014ம் ஆண்டில், பெட்ரோல் மீது ரூ.9.20 ஆக இருந்த மத்திய அரசின் வரி, 2021ல் ரூ.32.90 ஆக உயர்த்தியிருக்கிறது. அதேபோன்று, 2014 - ல் டீசல் மீது ரூ.3.46 ஆக இருந்த மத்திய அரசின் வரி, 2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் மத்திய அரசின் வரியை உயர்த்தியிருக்கிறது.



அதனை கண்டிப்பதாக பாஜகவின் விவசாய அணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, பாஜகவில் விவசாய பிரிவினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மாட்டுவண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து, உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...