விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.
கோவை:. கோவை அரசு மருத்துவமனையில் காவலருக்கு காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அதிவிரைவாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவர் தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ்(34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 ம் தேதி இரவு 7:30 மணிக்கு, அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் ரத்த குழாய் பரிசோதனை, இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவசர சிகிச்சை ஆபரேஷன் தியேட்டரில், மயக்கம் மருந்து கொடுத்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆலோசனையின் பெயரில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை இயக்குனர் பேராசிரியர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில் டாக்டர் விவேகானந்தன், டாக்டர் ரமணன், டாக்டர் சுரேந்தர், டாக்டர் குமரவேல், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர் ஜோதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 2.30 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு குண்டுகளும், ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி நவீன ஊடுகதிர் (C-arm) கருவியை பயன்படுத்தி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.
சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவர் தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ்(34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 ம் தேதி இரவு 7:30 மணிக்கு, அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் ரத்த குழாய் பரிசோதனை, இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவசர சிகிச்சை ஆபரேஷன் தியேட்டரில், மயக்கம் மருந்து கொடுத்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆலோசனையின் பெயரில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை இயக்குனர் பேராசிரியர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில் டாக்டர் விவேகானந்தன், டாக்டர் ரமணன், டாக்டர் சுரேந்தர், டாக்டர் குமரவேல், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர் ஜோதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 2.30 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு குண்டுகளும், ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி நவீன ஊடுகதிர் (C-arm) கருவியை பயன்படுத்தி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.