காவலருக்கு காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.


கோவை:. கோவை அரசு மருத்துவமனையில் காவலருக்கு காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அதிவிரைவாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவர் தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ்(34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 ம் தேதி இரவு 7:30 மணிக்கு, அனுமதிக்கப்பட்டார்.



இதையடுத்து, அவருக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் ரத்த குழாய் பரிசோதனை, இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவசர சிகிச்சை ஆபரேஷன் தியேட்டரில், மயக்கம் மருந்து கொடுத்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆலோசனையின் பெயரில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை இயக்குனர் பேராசிரியர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில் டாக்டர் விவேகானந்தன், டாக்டர் ரமணன், டாக்டர் சுரேந்தர், டாக்டர் குமரவேல், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர் ஜோதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 2.30 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு குண்டுகளும், ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி நவீன ஊடுகதிர் (C-arm) கருவியை பயன்படுத்தி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...