கனமழை காரணமாக 20-ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: கனமழை காரணமாக 20-ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் முழு கொள்ளளவு இருபத்துநான்கு அடியாகும்.
இந்த உப்பாறு அணை கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

தற்போது பருவமழை தீவிரமடைந்த நிலையில், 20-ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி காய்ந்து கிடந்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் மற்றும் திருமூர்த்தி அணையின் உபரி நீர் உப்பாறு அணையை வந்தடைந்தது.

இந்நிலையில் கடந்த 20-ஆண்டுகளுக்குப் பின் தற்போது உப்பாறு அணையில் 21.30 அடி நீர் இருப்பு உள்ளதால் தொடர்ச்சியாக இன்று உப்பாறு அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும் உப்பாறு அணையைப் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு அணையின் பாதுகாப்பு கருதி உப்பாறு அணையிலிருந்து ஆலாம்பாளையம் தொப்பம்பட்டி சின்னிய கவுண்டம்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உப்பாறு அணையின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பாறு அணை நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பாறு கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் முழு கொள்ளளவு இருபத்துநான்கு அடியாகும்.
இந்த உப்பாறு அணை கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது பருவமழை தீவிரமடைந்த நிலையில், 20-ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி காய்ந்து கிடந்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் மற்றும் திருமூர்த்தி அணையின் உபரி நீர் உப்பாறு அணையை வந்தடைந்தது.
இந்நிலையில் கடந்த 20-ஆண்டுகளுக்குப் பின் தற்போது உப்பாறு அணையில் 21.30 அடி நீர் இருப்பு உள்ளதால் தொடர்ச்சியாக இன்று உப்பாறு அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும் உப்பாறு அணையைப் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு அணையின் பாதுகாப்பு கருதி உப்பாறு அணையிலிருந்து ஆலாம்பாளையம் தொப்பம்பட்டி சின்னிய கவுண்டம்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உப்பாறு அணையின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பாறு அணை நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பாறு கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.