மாவட்ட ஆட்சியர் கட்டாயம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவசாயிகள் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர்.
ஆனால், எப்போதும் நடைபெறும் கூட்ட அரங்கு அல்லாமல் கீழ்த்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், புதிதாக மாற்றப்பட்ட கூட்ட அரங்கில் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இல்லாதது மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்து விவசாயிகள் இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அல்லாமல், மனுவாக அளிக்கும் வகையில், குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஏற்கனவே இருந்த நடைமுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் கட்டாயம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர்.
ஆனால், எப்போதும் நடைபெறும் கூட்ட அரங்கு அல்லாமல் கீழ்த்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், புதிதாக மாற்றப்பட்ட கூட்ட அரங்கில் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இல்லாதது மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்து விவசாயிகள் இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அல்லாமல், மனுவாக அளிக்கும் வகையில், குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஏற்கனவே இருந்த நடைமுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் கட்டாயம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.