சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்றது.
கோவை: சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்றது.
சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என கூறி சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொச்சின் சாலையில் காத்திருந்தது.
டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கியராஜ், உதவி ஆய்வாளர்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், முத்துக்குமார், உளவுத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, வருவாய்த்துறை வட்டாட்சியர் சகுந்தலா, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவு வரவில்லை.
போராட்டக்காரர்கள் மதுக்கடை மண்டல மேலாளர் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடியும் என தெரிவித்தனர். மண்டல மேலாளர் மகாராஜன் நேரில் வந்து மதுக்கடையைத் திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்தார் இதனை அடுத்து மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் திமுக அதிமுக பாஜக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா இந்துஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணிக்கு போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் மதுப் பிரியர்கள் தாங்கள் 8 கிலோமீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து முறைகேடாக மது விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து வாங்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே தங்களுக்கு மது கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மதுப் பிரியர்கள் இடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வசைபாடினர். மேலும் பத்திரிக்கையாளர் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர்.
சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என கூறி சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொச்சின் சாலையில் காத்திருந்தது.
டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கியராஜ், உதவி ஆய்வாளர்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், முத்துக்குமார், உளவுத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, வருவாய்த்துறை வட்டாட்சியர் சகுந்தலா, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவு வரவில்லை.
போராட்டக்காரர்கள் மதுக்கடை மண்டல மேலாளர் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடியும் என தெரிவித்தனர். மண்டல மேலாளர் மகாராஜன் நேரில் வந்து மதுக்கடையைத் திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்தார் இதனை அடுத்து மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் திமுக அதிமுக பாஜக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா இந்துஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணிக்கு போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் மதுப் பிரியர்கள் தாங்கள் 8 கிலோமீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து முறைகேடாக மது விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து வாங்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே தங்களுக்கு மது கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மதுப் பிரியர்கள் இடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வசைபாடினர். மேலும் பத்திரிக்கையாளர் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர்.