வறுமை ஒழிப்பு கோவை தான் முதலிடம்!!!

'வறுமை ஒழிப்பு' என்ற பிரிவில் 87-மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மற்றும் மதுரை 80-மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை 65-மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.


கோவை: நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் 'நிதி ஆயோக்' தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் முதல் முறையாகத் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தமாக 56 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்பற்றுவதைக் கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போன்ற முக்கிய பணிகளை மத்திய அரசின் 'நிதி ஆயோக்' மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளை ஜெர்மனியைச் சேர்ந்த வளர்ச்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி ஆயோக் இந்த பட்டியலை வெளியிட்டது.

இதில் கோவை 73.29 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றுள்ளது. அதேபோல் திருச்சி 70 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது. சென்னை 69.36 மதிப்பெண்களுடன் 16-வது இடத்தையும், மதுரை 65.85 மதிப்பெண்களுடன் 26-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் சிம்லா 75.50 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 'வறுமை ஒழிப்பு' என்ற பிரிவில் 87 மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மற்றும் மதுரை 80 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை 65 மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...