கோவையில் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்..!

துடியலூர் அருகே யானை கூட்டம் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: துடியலூர் அருகே யானை கூட்டம் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை துடியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கு சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதும், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூர் பகுதியில் செல்வராஜ், ராஜசேகர், குமாரசாமி, வெங்கடேசன், பிரபாகரன், மணி ஆகியோருக்கு சொந்த விவசாய தோட்டங்கள் உள்ளது. இங்கு அவர்கள் அனைவரும் வாழை பயிரிட்டுள்ளனர். வனத்தை விட்டு வெளியில் வந்த 8-யானைகள் இவர்களது தோட்டத்திற்குள் புகுந்தது.



அங்கு பயிரிட்டிருந்த வாழை மரங்களை நாசப்படுத்தியது. அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் பின்னர் ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் பைப் லைனையும் உடைத்து சேதப்படுத்தியது. யானைகள் சேதப்படுத்தியதில் 1 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக துடியலூர், பன்னிமடை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிகின்றன.

அப்படி வரும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...