மேலும், அந்த கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் நேற்று மாலை சிக்கலாம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், புகையிலை பாக்கெட் விற்பனை செய்ததாக அருள்செல்வம்(41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் நேற்று மாலை சிக்கலாம்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், புகையிலை பாக்கெட் விற்பனை செய்ததாக அருள்செல்வம்(41) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.