இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
கோவை: திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் மனைவியை மனநலம் பாதித்த கணவன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (65).

இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்குச் சென்றார். பின்னர் வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குருநாதன், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வாக்குவாதம் நடைபெறுவதாக குருநாதன் மகன் விநாயகத்திடம் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மகன் விநாயகன் வந்து சமாதானப்படுத்த முற்பட்ட போது வீட்டில் இருந்த இரும்பு கம்பி (கடப்பாரை) கொண்டு தனது மனைவியை தலையிலும் கை, கால் என குருசாமி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரை தூக்க முற்பட்ட போது மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களுடைய வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி இறந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாரை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாரையால் தாக்கிக் கொன்று விட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் பூங்கொடி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (65).
இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்குச் சென்றார். பின்னர் வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குருநாதன், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வாக்குவாதம் நடைபெறுவதாக குருநாதன் மகன் விநாயகத்திடம் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மகன் விநாயகன் வந்து சமாதானப்படுத்த முற்பட்ட போது வீட்டில் இருந்த இரும்பு கம்பி (கடப்பாரை) கொண்டு தனது மனைவியை தலையிலும் கை, கால் என குருசாமி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரை தூக்க முற்பட்ட போது மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களுடைய வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி இறந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாரை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாரையால் தாக்கிக் கொன்று விட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் பூங்கொடி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.