கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை: கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(49) முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு கோகிலாமணி(43) என்ற மனைவியும் 6 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மாரிமுத்து கடந்த 23ஆம் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதிக்குச் செல்ல கிணத்துக்கடவு வந்துள்ளார். பின்னர் மாரிமுத்து அங்கிருந்த நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அரசம் பாளையம் செல்ல ஆர்.எஸ்.சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து மாரிமுத்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி கோகிலாமணி கொடுத்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(49) முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு கோகிலாமணி(43) என்ற மனைவியும் 6 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மாரிமுத்து கடந்த 23ஆம் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதிக்குச் செல்ல கிணத்துக்கடவு வந்துள்ளார். பின்னர் மாரிமுத்து அங்கிருந்த நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அரசம் பாளையம் செல்ல ஆர்.எஸ்.சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து மாரிமுத்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி கோகிலாமணி கொடுத்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.