கிணத்துக்கடவில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.!!

கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(49) முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு கோகிலாமணி(43) என்ற மனைவியும் 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மாரிமுத்து கடந்த 23ஆம் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதிக்குச் செல்ல கிணத்துக்கடவு வந்துள்ளார். பின்னர் மாரிமுத்து அங்கிருந்த நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அரசம் பாளையம் செல்ல ஆர்.எஸ்.சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து மாரிமுத்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி கோகிலாமணி கொடுத்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...