அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகள் 700 பேர் விடுதலை: தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு 700-ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.


சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, 113-வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700-ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 10-மத்தியச் சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் அதனைச் செயல்படுத்தும் விதமாக முன் விடுதலை செய்ய ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17- குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கைதிகள் குறித்து, முறையாக ஆய்வு செய்து வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த வழிகாட்டுதல்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, 700-குற்றவாளிகளை விடுவிக்க 17 விதிமுறைகளை வகுத்து இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி தமிழகம் முழுவதும் உள்ள மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் கைதிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நன்னடத்தை மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் 700 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...