கோவையில் கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை..!

வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை, அரசு அறிவித்தபடி உடனடியாக விடுவிக்க, கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் கிராம சுகாதாரம், பகுதி சுகாதாரம், சமுதாய சுகாதாரம் என்ற பிரிவுகளில், 350க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கிராமப்புறங்களிலுள்ள தாய்-சேய் நலப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், அறிவித்த ஊக்க ஊதியத்தை வழங்க கிராம சுகாதார செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட கிராம, பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் செயலாளர் லில்லி கூறுகையில், ''வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். பணி நேரம் காலை, 9 முதல் மாலை 4 மணி என வரையறை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு 2021 ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான, 15,000 ரூபாய் ஊக்க ஊதியத்தை, உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...