தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கோவை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரதமர் நரோந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணங்களை உயர்த்துகின்றன. சமீபகாலமாகப் பல நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.
ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்கள் வியாபாரம் இல்லாததால், அவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் எதிர்பாராத விதமாக மொபைல் போன்களின் விற்பனை 60 முதல் 65% வரை அதிகரித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் முதல், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் (IT sector)வரை ஸ்மார்ட் போன்களின் கூடுதல் பயன்பாட்டினால், தொலைத் தொடர்பு சாதனமாக விற்பனையும் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல.
கைபேசி ஆபரேட்டர்களின் தொடர்ச்சியான இழப்பிற்கு முக்கிய காரணம் ஆடம்பர செலவு குறைப்பு வழிகளை பின்பற்றவில்லை. மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ஒன்று-சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்து நிறுவனங்களின் விளம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தச் செய்தது.
அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் செலவுக் கட்டுப்பாடு அவர்களின் விளம்பரம் மற்றும் சந்தை படுத்துவதில் செலவுகளைக் குறைக்கும் நெறி முறைகளைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் அவசியம். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்தப் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரதமர் நரோந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணங்களை உயர்த்துகின்றன. சமீபகாலமாகப் பல நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.
ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்கள் வியாபாரம் இல்லாததால், அவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் எதிர்பாராத விதமாக மொபைல் போன்களின் விற்பனை 60 முதல் 65% வரை அதிகரித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் முதல், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் (IT sector)வரை ஸ்மார்ட் போன்களின் கூடுதல் பயன்பாட்டினால், தொலைத் தொடர்பு சாதனமாக விற்பனையும் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல.
கைபேசி ஆபரேட்டர்களின் தொடர்ச்சியான இழப்பிற்கு முக்கிய காரணம் ஆடம்பர செலவு குறைப்பு வழிகளை பின்பற்றவில்லை. மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ஒன்று-சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்து நிறுவனங்களின் விளம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தச் செய்தது.
அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் செலவுக் கட்டுப்பாடு அவர்களின் விளம்பரம் மற்றும் சந்தை படுத்துவதில் செலவுகளைக் குறைக்கும் நெறி முறைகளைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் அவசியம். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்தப் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கூறியுள்ளனர்.