மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்த சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமருக்கு கடிதம்.!!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரதமர் நரோந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணங்களை உயர்த்துகின்றன. சமீபகாலமாகப் பல நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.

ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்கள் வியாபாரம் இல்லாததால், அவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் எதிர்பாராத விதமாக மொபைல் போன்களின் விற்பனை 60 முதல் 65% வரை அதிகரித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் (IT sector)வரை ஸ்மார்ட் போன்களின் கூடுதல் பயன்பாட்டினால், தொலைத் தொடர்பு சாதனமாக விற்பனையும் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல.

கைபேசி ஆபரேட்டர்களின் தொடர்ச்சியான இழப்பிற்கு முக்கிய காரணம் ஆடம்பர செலவு குறைப்பு வழிகளை பின்பற்றவில்லை. மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ஒன்று-சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்து நிறுவனங்களின் விளம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தச் செய்தது.

அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் செலவுக் கட்டுப்பாடு அவர்களின் விளம்பரம் மற்றும் சந்தை படுத்துவதில் செலவுகளைக் குறைக்கும் நெறி முறைகளைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் அவசியம். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்தப் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கூறியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...