கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்..!

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் 30 நாட்களுக்குள் கொடுக்க உத்தரவு.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 11ஆம் வகுப்பு படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (31) பாலியல் அத்துமீறலால் தற்கொலை செய்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் தொடர்பாகப் பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து நடவடிக்கை எடுக்காததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமீன் கோரி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக்கூறி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதையும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வழக்கு முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கினால் பள்ளி முதல்வர் தலைமறைவாக வாய்ப்புள்ளதாகவும், உயிரிழந்த மாணவி போல் வேறு ஏதேனும் மாணவி அந்தப்பள்ளியில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என விசாரித்து வருவதால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் வாதடப்பட்டது.

இந்த நிலையில், மாணவி உயிரிழந்ததற்கும் முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை என்றும், ஜாமீன் வழங்கவும் முதல்வர் மீரா ஜாக்சன் தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பித்தார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக 30 நாட்களுக்குள் ரூபாய் 5 லட்சம் அரசு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...