பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவரின் மனைவி சிவசங்கரி கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும், அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு, சிவசங்கரி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், பிறந்த குழந்தையின் மூளை நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு குழந்தையையும், தாயையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்ததையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால், அப்பெண்ணின் உறவினர்கள் சிகிச்சையளித்த அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் இருந்து மயக்க நிலையில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...