கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த கரடியை பார்த்து, சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் ஒரு கரடி புகுந்தது.
மருத்துவமனையில் உலா வந்த கரடியை பார்த்த அங்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
அவர்களின், கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.
இந்த நிலையில், நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்ததால் மீண்டும் பரபரப்பு நிலவியது.