திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி-ஜே.பி.நட்டா விமர்சனம்

திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி திமுக என்று திருப்பூரில் நடந்த பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.


திருப்பூர்: திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி திமுக. என்று திருப்பூரில் நடந்த பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

வீரவேல், வெற்றி வேல் கோஷத்துடன் தனது உரையைத் துவக்கி உள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேசினார்.

தொடர்ந்து பா.ஜ.க.,தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது:- அண்ணாமலை எனர்ஜிடிக் தலைவர் உயர்ந்த கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் என சுதந்திர போராட்டத்தில் பலர் தமிழகத்திலிருந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிர் நீத்துள்ளனர்.



அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் தனது வணக்கங்கள். திமுகவின் நடவடிக்கை குறித்துப் பேசினீர்கள். திமுக என்றால் ஊழல், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுக. குடும்ப கட்சிக்கு எதிரான ஒரே நம்பிக்கை பாஜக பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது.

அதற்கு எதிரானது பாஜக. விபூதி, ஆசீர்வாதம் பெறக்கூடாது என திக சொல்கிறது. ஆனால் வெற்றிவேல் அதனை முறியடித்தது. பாஜக ஜனநாயக கட்சி, தமிழ் கலாச்சாரம் உலக அரங்கில் உள்ளது. உலக அரசியலில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. 1.3 பில்லியன் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றப் பிரதமர் போராடி வருகிறார்.

மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தை எதிர்க்கிறார்கள். ஏழை எளிய மக்கள் கொரோனா காலத்தில் பாதிக்கப்படக் கூடாது என பிரதமர் பாடுபடுகிறார். தமிழக பாஜக தலைவர்கள் விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யுங்கள், ஏராளமான வசதிகள் விவசாய துறைக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.11 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. பாஜக தொண்டர்கள் கொரோனா காலத்தில் கடுமையாகப் போராடி உள்ளனர். எந்த ஒரு மனிதனையும் பசியோடு உறங்க விடவில்லை, மருந்தில்லாமல் உறங்க விடவில்லை கடுமையாக பாஜகவினர் பணியாற்றி உள்ளனர்.

ஆனால் கொரோனா காலத்தில் திமுக தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது. கணினி முன்பு அமர்ந்து கொண்டுள்ளது. முன்பு கருணாநிதி வெள்ள தண்ணீரில் நின்று போஸ் கொடுத்தார். தற்போது ஸ்டாலின் வெள்ளத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீங்கள் பாக்கியசாலி அதனால் தான் பாஜகவில் உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...