வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள் பள்ளி சத்துணவு மையங்கள் மளிகை கடைகள் என்று உணவு தேடி அலைந்து கட்டிட சுவரை இடித்து உணவுப் பொருட்களை சாப்பிட்டு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் ஒரு வாரகாலமாக சுற்றித்திரியும் 8 காட்டுயானைகள் அப்பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் உறுளிகள் எஸ்டேட் 2வது பிரிவில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த 8 காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள தமிழரசி, அருண், கபீர் போன்றவர்களின் வீடுகளை ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



மேலும், மேரி என்பவரின் வீட்டின் பின்பக்க சுவரை இடித்து ஜன்னல் கதவுகளை உடைத்தது. உள்ளே இருந்த மேரி மற்றும் அவர்களின் சகோதரி இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர். வீட்டினுள் அமைத்திருந்த கூரை யானை இடித்ததால் சரிந்து விழுந்து முழுமையாக சேதம் அடைந்தது.



இதனால் வீட்டில் இருந்த கட்டில் டிவி பீரோ மற்றும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து மேரி மற்றும் அவரது தங்கை இருவரும் வீட்டின் பின்புற வழியாக தப்பித்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று உயிர் தப்பினர்.



இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகள் குடியிருப்புக்கள் வருவது தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கும் வனவிலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...