தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலி; நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு..!

இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் இயல்பு மழையை காட்டிலும் கூடுதலாகப் பெய்துள்ளது.



கோவை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் பற்றி மாதம்தோறும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கண்காணிப்பு கிணறுகளில் இம்மாதம் முதல் வாரத்தில் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் தேனி மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் 1.73 மீட்டர், காஞ்சிபுரம் 2.75 மீட்டர், திருவண்ணாமலை 4.81 மீட்டர், வேலூர் 3 மீட்டர், கள்ளக்குறிச்சி 3.50 மீட்டர், விழுப்புரம் 3.66 மீட்டர் நிலத்தடி நீர், முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

அதேபோல, சேலம் 0.95 மீட்டர், நாமக்கல் 0.80 மீட்டர், ஈரோடு 1.62 மீட்டர், கோவை 0.20 மீட்டர், திருப்பூரில் 1.74 மீட்டர், நீலகிரி 0.37 மீட்டர் என நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.

மதுரை 2.39 மீட்டர், சிவகங்கை 2.48 மீட்டர், திண்டுக்கல் 2 மீட்டர், விருதுநகர் 3 மீட்டர் அதிகரித்த நிலத்தடி நீர், தேனியில் மட்டும் 1.77 மீட்டர் சரிந்துள்ளது. இதேபோல நெல்லை 2.74 மீட்டர், தென்காசி 2.40 மீட்டர், தூத்துக்குடி 1.84 மீட்டர், கன்னியாகுமரி 1.09 மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.

இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் இயல்பு மழையை காட்டிலும் கூடுதலாக பெய்துள்ளது.

அதேபோல, வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இவ்வாறு, தொடர்ந்து பெய்யும் மழையே மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...