திருப்பூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயம் - சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி..!

படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு சொகுசு பேருந்தில் 44 பேர் பயணித்தனர். இதனிடையே, பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய ஆறு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சொகுசு பேருந்தில் பயணித்த 44 பயணிகளில் 6 பெண்கள், 8 ஆண்கள் என 14 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...