படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு சொகுசு பேருந்தில் 44 பேர் பயணித்தனர். இதனிடையே, பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய ஆறு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சொகுசு பேருந்தில் பயணித்த 44 பயணிகளில் 6 பெண்கள், 8 ஆண்கள் என 14 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு சொகுசு பேருந்தில் 44 பேர் பயணித்தனர். இதனிடையே, பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய ஆறு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சொகுசு பேருந்தில் பயணித்த 44 பயணிகளில் 6 பெண்கள், 8 ஆண்கள் என 14 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.