கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவரைக் கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட 3-பேர் கைது செய்யப்பட்டநிலையில், தலைமறைவாக உள்ள 3-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவரைக் கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட 3-பேர் கைது செய்யப்பட்டநிலையில், தலைமறைவாக உள்ள 3-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் வயது 47, வெடிகுண்டு வழக்கில் 47 -வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையிலிருந்து வெளியே வந்து சேக் பக்ருதீன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவர் மீது கோவை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் நேற்று ஆட்டோவில் போத்தனூர் சாரதாமில் அருகேயுள்ள மட்டன் கடைக்கு ஆடு விற்பனைக்காகக் கொண்டு சென்றார்.
சுலைமான் என்பவர் ஆட்டை திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இதை அறிந்த அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த ஆடு திருடப்பட்டது என கூறி ஷேக் பக்ருதீன் னிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது ஆத்திரத்தில் 6 பேரும் சேர்ந்து சேர்க்கை சரமாரியாகத் தாக்கினர் கட்டையால் அடித்து அதில் அவருக்கு மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி மயக்கமடைந்தார் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஷேக் பக்ருதியின் மனைவி ஜீனத் நிஷாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர் சிலரது உதவியுடன் கணவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரை தாக்கியது. போத்தனூர் என். பி.டரியை சேர்ந்த சுலைமான் மகன்கள் அபுதாஹீர் 28, முகமது மஜீத் 24, மற்றும் முகமது அலி 24. அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தன இந்த நிலையில் சேக் பக்ரூதின் தாக்கி அபுதாகிர், முகம்மது மஜித், முகம்மது அலி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் வயது 47, வெடிகுண்டு வழக்கில் 47 -வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையிலிருந்து வெளியே வந்து சேக் பக்ருதீன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவர் மீது கோவை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் நேற்று ஆட்டோவில் போத்தனூர் சாரதாமில் அருகேயுள்ள மட்டன் கடைக்கு ஆடு விற்பனைக்காகக் கொண்டு சென்றார்.
சுலைமான் என்பவர் ஆட்டை திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இதை அறிந்த அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த ஆடு திருடப்பட்டது என கூறி ஷேக் பக்ருதீன் னிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது ஆத்திரத்தில் 6 பேரும் சேர்ந்து சேர்க்கை சரமாரியாகத் தாக்கினர் கட்டையால் அடித்து அதில் அவருக்கு மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி மயக்கமடைந்தார் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஷேக் பக்ருதியின் மனைவி ஜீனத் நிஷாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர் சிலரது உதவியுடன் கணவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரை தாக்கியது. போத்தனூர் என். பி.டரியை சேர்ந்த சுலைமான் மகன்கள் அபுதாஹீர் 28, முகமது மஜீத் 24, மற்றும் முகமது அலி 24. அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தன இந்த நிலையில் சேக் பக்ரூதின் தாக்கி அபுதாகிர், முகம்மது மஜித், முகம்மது அலி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.