தடாகம் பகுதியில் செங்கல் சூளையிலிருந்து செங்கற்களை கடத்திய லாரி வனத்துறை வாகனம் மீது மோதி விபத்து.!

தடாகம் பகுதியில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து சட்டவிரோதமாகச் செங்கற்களைக் கடத்தி வந்த லாரி வனத்துறை வாகனம் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து லாரியினை துரத்தி பிடித்தனர்.



கோவை: தடாகம் பகுதியில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்களைக் கடத்திய லாரி வனத்துறை வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியநிலையில், அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் தடாகம், சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.

தடாகம் பள்ளத் தாக்குப் பகுதியில் தடை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான ஆழத்தில் செம்மண் தோண்டப்பட்டது. மேலும், இப்பகுதிகள் HACA கமிட்டியின் கீழ் வருவதால் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது.

அளவுக்கு மீறிய கட்டுமானங்கள் கட்டக் கூடாது என்ற அரசின் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவினை செங்கல் சூளைகள் முறையாகப் பின்பற்றாமலும், அளவுக்கு அதிகமான காற்று மாசினை ஏற்படுத்தியதன் காரணமாகச் சென்னை உயர்நீதி மன்றம் இப்பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்படக் கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து செங்கல் சூளைகள் மூடப்பட்டன. ஆனாலும் சூளைகளில் இருக்கும் செங்கற்களை இரவு நேரங்களில் சூளை உரிமையாளர்களால் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த கணுவாய் பிரிவு அருகே வனத் துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சட்டவிரோதமாகச் செங்கற்களைக் கடத்தி வந்த லாரி வனத்துறை வாகனம் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து லாரியினை துரத்தி பிடித்தனர். இதில் வனத்துறை வாகனம் சேதமடைந்தது. வனத்துறையினர் தடாகம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.



மேலும், இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் அளித்த புகாரின் பேரில் TMT செங்கல் சூளை உரிமையாளர் அருண், லாரியின் டிரைவர், தமிழரசன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் கடத்தி வரப்படுவது தொடர் கதையாகி உள்ளதால் இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தி.மு.க வின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...