திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து நகை-பணம் கொள்ளை.!!

திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.



இந்நிலையில் நாளைய தினம் கோவில் ஆண்டு விழா நடைபெற உள்ள சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த பெண் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு திருப்பூர் நல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவிலில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...