கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை நீல, பச்சை நிற பக்கெட்டுகளில் வைக்க அறிவுறுத்தல்..!

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத நபர்கள் மீது அபராதம் விதிக்க அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள், விடுதிகள் போன்றவற்றில் குப்பைகளை நீல மற்றும் பச்சை நிற பக்கெட்டுகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 5500 தெருக்கள் உள்ளன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ள வீடுகளில் 250 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு 1200 பேர் வரை சிறிய ரக வாகனம் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பையை சேகரித்து வருகின்றனர்.

ஆனால், வீடுகளில் உள்ளவர்கள் தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டும் போது மக்கம், மக்காத குப்பை என அனைத்தையும் சேர்த்து கொட்டிவிடுகின்றனர். இதுதவிர, காய்கறி, பழங்கள் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், சாலையோர கடைகள், தனியார் நிறுவனங்கள் என பலவற்றிலிருந்தும் வெளியாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் ஒருசேர கொட்டப்படுகிறது.

இதை தடுக்க, அனைத்து வகை கடைகள், விடுதிகள் உட்பட குப்பைகளை வெளியேற்றும் இடங்களில் மறுசுழற்சி செய்யும் குப்பையை சேகரிக்க நீல நிற பிளாஸ்டிக் பக்கெட்களும், மக்கும் குப்பையை சேகரிக்க பச்சை நிற பிளாஸ்டிக் பக்கெட்களும் வைக்க மாநகராட்சி சார்பாக கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த அறிவுறுத்தல் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெற வசதியாக இருக்கும். இதனால் வெள்ளலூருக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகள் தரம் பிரித்து போய் சேரும். இதனால் குப்பைக்கிடங்கில் மீதேன் உருவாகி தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத நபர்கள் மீது அபராதம் விதிக்க அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...