இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47வது குற்றவாளியாகும். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கோவை குண்டுவெடிப்பு கைதி இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆத்துபாலம், குறிச்சி பிரிவு- போத்தனுார் பிரதான சாலையில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுலைமான் (61). இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதில் ஒன்றை ஒருவர் திருடி, ஆட்டோவில் எடுத்துச் செல்வதை கண்டார்.
இதையடுத்து, சுலைமான் மற்றும் மகன்கள் முகமது, இப்ராஹிம் ஆகியோர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். சாரதா மில் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது கடை முன் ஆட்டோ நிற்பதை கண்டனர்.
பின்னர், அங்கிருந்த பாரதி நகரை சேர்ந்த சேட் பக்ருதீன், நூர்முகமது ஆகியோரிடம், இவர்கள் கேள்வி எழுப்பியதும், நூர்முகமது ஆட்டை திரும்ப கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சுலைமான் அளித்த புகாரின் படி, போத்தனுார் போலீசார் நுார்முகமது கடைக்குச் சென்ற போது, சேட் பக்ருதீனை காணவில்லை. திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், காலை 10.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில், நினைவிழந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அந்நபர், சேட் பக்ருதீன் என தெரிய வந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மனைவி ஜீனத் நிஷா, தனது கணவரை யாரோ தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சுலைமான் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது ஆகியோரிடம் விசாரித்தனர். மேலும், தலைமறைவான முகமது, இப்ராஹிம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47வது குற்றவாளியாகும். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆத்துபாலம், குறிச்சி பிரிவு- போத்தனுார் பிரதான சாலையில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சுலைமான் (61). இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில், அதில் ஒன்றை ஒருவர் திருடி, ஆட்டோவில் எடுத்துச் செல்வதை கண்டார்.
இதையடுத்து, சுலைமான் மற்றும் மகன்கள் முகமது, இப்ராஹிம் ஆகியோர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். சாரதா மில் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது கடை முன் ஆட்டோ நிற்பதை கண்டனர்.
பின்னர், அங்கிருந்த பாரதி நகரை சேர்ந்த சேட் பக்ருதீன், நூர்முகமது ஆகியோரிடம், இவர்கள் கேள்வி எழுப்பியதும், நூர்முகமது ஆட்டை திரும்ப கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சுலைமான் அளித்த புகாரின் படி, போத்தனுார் போலீசார் நுார்முகமது கடைக்குச் சென்ற போது, சேட் பக்ருதீனை காணவில்லை. திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், காலை 10.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில், நினைவிழந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அந்நபர், சேட் பக்ருதீன் என தெரிய வந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மனைவி ஜீனத் நிஷா, தனது கணவரை யாரோ தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சுலைமான் இறைச்சி கடை நடத்தும் நூர்முகமது ஆகியோரிடம் விசாரித்தனர். மேலும், தலைமறைவான முகமது, இப்ராஹிம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இறந்த சேட் பக்ருதீன், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 47வது குற்றவாளியாகும். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.