குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையின் வீடியோ அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்னர் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
பந்தலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் குறிப்பாக இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், நேற்று இரவு பந்தலூர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையின் வீடியோ அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்னர் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.