கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..!

ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனையிட்ட போது ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையிலிருந்து சார்ஜாவுக்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோகுலகோடீஸ்வரன் (27) மீது சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

சோதனையில் அவரது உடமைகள் மற்றும் ஆடைகளில், ரூ.26.62 லட்சம் மதிப்பிலான, சவுதி அரேபியாவின் ரியால், ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் தினார், அமெரிக்க டாலர்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கோகுல கோடீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...