ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனையிட்ட போது ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து சார்ஜாவுக்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோகுலகோடீஸ்வரன் (27) மீது சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் அவரது உடமைகள் மற்றும் ஆடைகளில், ரூ.26.62 லட்சம் மதிப்பிலான, சவுதி அரேபியாவின் ரியால், ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் தினார், அமெரிக்க டாலர்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கோகுல கோடீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து சார்ஜாவுக்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோகுலகோடீஸ்வரன் (27) மீது சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் அவரது உடமைகள் மற்றும் ஆடைகளில், ரூ.26.62 லட்சம் மதிப்பிலான, சவுதி அரேபியாவின் ரியால், ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் தினார், அமெரிக்க டாலர்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கோகுல கோடீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.