5-மாதம் அல்ல 5-ஆண்டு காலமும் இதுபோல தான் பணி செய்வோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஐந்து மாதம் மட்டுமல்ல 5-ஆண்டுகளுக்கும் இதேபோல்தான் திமுகவினர் ஆட்சி செய்ய இருப்பதாகவும், உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன் என்றும், எங்களை உற்சாகப்படுத்துங்கள் என திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின் 3வது முறையாகத் திருப்பூருக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முடிவுற்ற திட்டப்பணிகளைத் துவங்கி வைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் ஆகிய நிகழ்வுகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, முத்துச்சாமி, ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் முடிவுற்ற 28.17 கோடி மதிப்பில் 20 திட்டப்பணிகளைத் துவங்கி வைத்தார். புதிதாக 41.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.



4335 பயனாளிகளுக்கு 55.65 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த பணிகளின் மொத்த மதிப்பு 84.24 கோடி ரூபாய் ஆகும். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு அண்ணா, பெரியார் இருபெரும் தலைவர்கள் முதன் முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன் எனக் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி அமைந்தபோது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது இனத்தின் ஆட்சியாக இருக்கும் என தெரிவித்தேன். அதேபோல் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியவர், திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற பெயர் எடுத்தோம், ஆனால் கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என பேச விரும்பவில்லை, இதில் அரசியல் பேச விரும்பவில்லை, அதற்கென வேறு மேடை இருக்கிறது என அரசு விழா மேடையில் கூறினார்.

கடந்த 10 ஆண்டுக்காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின்ன மாக்கப்பட்டுள்ளது என கூறியவர், ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது அதற்குள் இவ்வளவு செய்திருக்கிறோம் என்றால் இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்யவிருக்கிறோம் என எண்ணி பாருங்கள் என மக்களிடத்தில் கூறினார்.

நம் பணிகளைச் சாதனைகளை அண்டை மாநிலம் மட்டுமல்ல அண்டை நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன அவை எனக்கான பாராட்டுக்கள் அல்ல தமிழ்நாட்டு மக்களுக்காக என்றதுடன், நம்பர் 1 முதல்வர் அல்ல நம்பர் 1 தமிழ்நாடு என்பதே எனக்குப் பெருமை என்றார்.

மேலும், 5 மாதம் அல்ல 5 ஆண்டுக்காலமும் இதுபோலத்தான் பணி செய்வோம் என்றவர், உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள் என கூறினார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...