அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல் ஏற்றுமதியாளர் டாலர் பாலு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களிடம் கலந்துரையாடினார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல் ஏற்றுமதியாளர் டாலர் பாலு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மே 7ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் ஒரு விடிவெள்ளி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பதவியேற்ற இரண்டு மாதங்களில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி அதில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 40 திட்டங்களும் 83 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் கொண்டுவந்த முதல்வரின் சீரிய செயல்பாட்டிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் லட்சியமும் அதே போல் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையின் சிறப்பம்சமாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நன்றி தெரிவித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழகத்துக்கு என்று ஒரு தனி ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையினை தாங்கள் பதவியேற்ற மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அன்பரசன் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல் ஏற்றுமதியாளர் டாலர் பாலு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மே 7ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் ஒரு விடிவெள்ளி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பதவியேற்ற இரண்டு மாதங்களில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி அதில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 40 திட்டங்களும் 83 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் கொண்டுவந்த முதல்வரின் சீரிய செயல்பாட்டிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் லட்சியமும் அதே போல் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையின் சிறப்பம்சமாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நன்றி தெரிவித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழகத்துக்கு என்று ஒரு தனி ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையினை தாங்கள் பதவியேற்ற மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அன்பரசன் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.