கோவையில் ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌.


கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் ரூ.89.73 கோடி மதிப்பிலான முடிந்த 128 பணிகளைத் திறந்து வைத்தார். ரூ.596.02 கோடி மதிப்பில் புதிதாக 67 பணிகளைத் துவக்கி வைத்தார்.



மேலும் ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை. வெற்றி வாய்ப்பை தவற விட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்கு தான் நடத்தப்படுகின்றது.



செந்தில் பாலாஜியைப் பொறுப்பாக நியமித்து இருக்கிறேன். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது. திமுக அரசைப் பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது.

ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது. இப்போதும் பலர் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும்.

புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது தான் முக்கியம். ஏராளமான திட்டங்களைத் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்‌‌ மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராகக் குடிநீர் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் திட்ட சாலைகள் போடப்படவில்லை.

5 திட்ட சாலைகளை அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகரின் வெளிப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படும்.

கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு அடித்தளமாக இருக்கும் மாவட்டம் கோவை. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் முதல் தொழில் மாநிலமாகத் தமிழகம் இருக்க வேண்டும்.

நாளை தொழில் முதலீடு மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவையாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் எனது பணி இருக்கும்‌. அனைத்திலும் தலை சிறந்த மாவட்டமாகக் கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...