கோவை குனியமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை..!

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் மகாலிங்கம் (72). இவர் செல்வபுரம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது மனைவி சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். இதையடுத்து மகாலிங்கம் வீட்டிற்குச் செல்லாமல் கடையிலேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில், மீண்டும் மறுநாள் பணி முடித்து வீட்டிற்குச் சென்ற பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், 27 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் வைர மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, மகாலிங்கம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...