இந்திய அளவிலான சாம்பியன்ஸ்ஷிப் ஹாக்கி போட்டியில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட குன்னூர் இளைஞர்கள்

குன்னூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பிரசாத் (21) ஆகிய இருவரும் ஹாக்கி இந்தியா-வால் இந்திய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி 7-வது சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது, வரும் 2017 ஜனவரி 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நீலகிரி ஹாக்கி அசோசியேசன் தலைவர் எஸ்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:- "கடந்த 2000-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோரை இதற்காக தயார்படுத்தி வருகிறோம். அவர்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளனர்" என்றார்.

நீலகிரி ஹாக்கி அசோசியேசன் செயலாளர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:- "ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது கவனம் முழுவதையம் ஹாக்கியில் மட்டுமே செலுத்தி தற்போது இந்திய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...