இந்திய அளவிலான சாம்பியன்ஸ்ஷிப் ஹாக்கி போட்டியில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட குன்னூர் இளைஞர்கள்

குன்னூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (23), பிரசாத் (21) ஆகிய இருவரும் ஹாக்கி இந்தியா-வால் இந்திய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி 7-வது சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியானது, வரும் 2017 ஜனவரி 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நீலகிரி ஹாக்கி அசோசியேசன் தலைவர் எஸ்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:- "கடந்த 2000-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோரை இதற்காக தயார்படுத்தி வருகிறோம். அவர்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளனர்" என்றார்.

நீலகிரி ஹாக்கி அசோசியேசன் செயலாளர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:- "ஸ்ரீராம் மற்றும் பிரசாத் ஆகியோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது கவனம் முழுவதையம் ஹாக்கியில் மட்டுமே செலுத்தி தற்போது இந்திய அளவிலான போட்டிகளில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...