கோவை துடியலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

யானைகள் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை புறநகர் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன்புதுார், ராமகிருஷ்ணா நகர், நேதாஜி நகர், கவுதம் நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை, 3 மணிக்கு இரண்டு யானைகள் அப்பகுதியில் உலா வந்தன. அவை வீடுகளுக்கு முன் வளர்ந்திருந்த வாழைகள், தென்னங்கன்றுகளை பிடித்து இழுத்து சேதப்படுத்தின.

இதனால், அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டுயானைகள் இங்குள்ள பள்ளத்தின் வழியாக வந்து மேட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. காட்டு யானைகளின் வரவை தடுக்க, வனத்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...