கோவை துடியலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

யானைகள் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை புறநகர் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன்புதுார், ராமகிருஷ்ணா நகர், நேதாஜி நகர், கவுதம் நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை, 3 மணிக்கு இரண்டு யானைகள் அப்பகுதியில் உலா வந்தன. அவை வீடுகளுக்கு முன் வளர்ந்திருந்த வாழைகள், தென்னங்கன்றுகளை பிடித்து இழுத்து சேதப்படுத்தின.

இதனால், அச்சத்தில் உள்ள அப்பகுதியினர் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டுயானைகள் இங்குள்ள பள்ளத்தின் வழியாக வந்து மேட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. காட்டு யானைகளின் வரவை தடுக்க, வனத்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேட்டை தடுப்பு காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...