கோவையில் ஆட்டை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..!

மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டைக் கொன்று அடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை இழுத்துச் சென்றதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை கிராமம், இரண்டு பக்கம் வனப்பகுதியாலும், இரண்டு பக்கம் பவானி ஆற்று நீராலும் சூழப்பட்டுள்ளது.

இங்குள்ள விவசாயிகள் வாழை, தென்னை, பாக்கு ஆகிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். பலர் ஆடு, மாடுகள் வளர்ப்பதை உபதொழிலாக செய்து வருகின்றனர்.

தற்போது, நெல்லித்துறை விளாமரத்துார் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ருக்குமணி என்பவரின் கன்றுக் குட்டியை, சிறுத்தை அடித்து கொன்று இழுத்துச் சென்றது. விவசாய தோட்டங்களில், வளர்க்கப்படும் நாய்களும் காணாமல் போயுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் ருக்மணி, தனது ஆட்டை, தோட்டத்து சாளையில் கட்டியிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது, ஆடு காணவில்லை. ஆனால், ஆடு கட்டப்பட்டிருந்த கயிறு, இரு துண்டுகளாக கிடந்தன.

மேலும், ஆட்டை சிறுத்தை இழுத்து சென்றதற்கான கால் தடையம் இருந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர்.

இது தொடா்பாக, நெல்லித்துறை விளாமரத்தூர் பகுதியினர் கூறுகையில்:-

சமீபகாலமாக இப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய்கள் காணாமல் போகின்றன. சிலர் சிறுத்தையை பார்த்துள்ளனர். இரவில் இப்பகுதியில் நடந்து செல்ல பயமாக உள்ளது. எனவே, இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...