பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-கோவையின் புதிய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார்

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்தார்.


கோவை: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த தீபக் தாமோர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர், நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது அறைக்குச் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும். அதற்காகத் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளோம்.

அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தி போலீஸ் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர முதியவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

சாலை விபத்துகளைக் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

கோவையை அமைதியான மாநகரமாக வைக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருட்டு சம்பவங்களைக் குறைக்க ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதிய கமிஷனரை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் வீல்சேரில் வந்து போலீஸ் கமிஷனரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவரிடம் போலீஸ் கமிஷனர் ஆறுதல் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...