முதலமைச்சர் நாளை கோவை வருகை: பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி.!

தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், அமைச்சர் பேசுகையில்;- பொதுமக்களின் எண்ணங்களில் தமிழக முதலமைச்சர் கோவை வருகை தந்தார். மிகச்சிறப்பாக நடந்தது எனப் பெருமைப்படும் அளவில் இருக்கவேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இன்றி பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட வேண்டும். காலை10-30 மணிக்கு முதல்வர் வருகைதர உள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வரவேற்பு அளிக்க வேண்டும். வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் முதலமைச்சர் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

பொதுமக்கள் மனமகிழ்ச்சியோடு சென்று நலத்திட்ட உதவிகள் பெற்றேன். என்று இருக்க வேண்டும். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகள் என்பதை விட, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போது, தமிழக முதலமைச்சர் கோவை வளர்ச்சி பணிகளுக்கு புதிய திட்டங்களைத் துவக்கி வைக்கவும் உள்ளார் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...